20 நாட்களில் 2 பெண்களை கொலை செய்த கிளீனர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்:இருபது நாட்களில் இரண்டு பெண்களை கொலை செய்துள்ளார் நாகு என்ற லாரி கிளீனர்.

திருச்சி மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்த சிலம்புச்செல்வி (26), ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். இது தொடர்பாக அவர் வீட்டின் கீழே குடியிருந்த லாரி கீளினர் நாகு என்ற நாகராஜன் (28) போலீசாரிடம் பிடிபட்டார்.


போலீஸார் அவனிடம் விசாரித்தபோது, சிலம்புசெல்வி தன்னை காதலிக்க மறுத்ததால் அவரை கழுத்து நெறித்து கொன்றாதாகக் கூறினான். மேலும்20 நாட்களுக்கு முன் கார்த்திகா என்பவரையும் கொலை செய்தேன் என்றும் கூறினான். அதிர்ந்து போன போலீசார் அவனிடம் விசாரித்தபோது,

நாகராஜன் திருப்பூரில் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்தபோது, அங்கு கார்த்திகா (21) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்கும்காதல் ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திகா வற்புறுத்தியுள்ளார்.


ஆனால், அதை நாகு விரும்பவில்லை. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கடந்த 5ம் தேதி, கார்த்திகாவை திருச்சிக்கு அழைத்துவந்துள்ளான். அங்கு காவிரி ஆற்றின் மீதுள்ள ரயில் மேம் பாலத்தின் கீழ் ஒரு இடுக்கில் வைத்து கார்த்திகாவை கற்பழித்துள்ளான். பின்னர் அவரைகொன்று விட்டு உடலை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளான்.

மகளைக் காணாத கார்த்திகாவின் தாயார் கடந்த 10 ம்தேதி, திருப்பூர் போலீஸார்டம் புகார் அளித்ததின் பேரில், வழக்கு பதிவு செய்து கார்த்திகாவைதேடி வந்தனர்.

இதன் பிறகே சிலம்புச்செல்வியை கொன்றிக்கிறான். 20 நாட்கள் இடைவெளியில் 2 பெண்களை கொன்ற நாகராஜனை ரயில்வே போலீஸார் கைதுசெய்து விசாரணை செய்து வருகின்றனர். நாகு கொடுத்த தகவலின் அடிப்படையில் கார்த்திகாவின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+