எஸ்.வி.சண்முகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:மதுரையில் மரணமடைந்த அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் உடல், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம்விளாம்பட்டியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்.கம். இவர் சமீபத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். திமுகவுக்கு சாதகமாகதிரும்பினார்.

இதையடுத்து அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார் சண்முகம். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. இதனால் திமுகவில் போய்ச் சேர முடியாமல்அவதிப்பட்டு வந்தார்.

திமுகவிலும் அவர் ஆரம்பத்தில் கவனிக்கப்பட்டதைப் போல தொடர்ந்து கவனிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டார். இந்த நிலையில், மாரடைப்பால்மதுரையில் நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளசொந்த ஊரான விளாம்பட்டிக்கு சண்முகத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது உறவினர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கூடி சண்முகத்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகஅரசின் கொறடா சக்ரபாணி, மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி, மாநகராட்சிஆணையர் தினகரன், சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.மூர்த்தி உள்ளிட்டோர் சண்முகத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சண்முகத்தின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மகன் மாணிக்கம் இதைச் செய்தார். பின்னர் சண்முகத்தின் உடல் அவருக்குசொந்தமான தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கு உள்ளிட்டவற்றில் அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+