காஞ்சிபுரம்: வேன் மீது பஸ் மோதி 4 பேர் பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இன்று காலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே பலாப்பாக்கத்தில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று காலை பஸ்சுக்காக பேருந்து நிறுத்ததில்காத்திருந்தனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஒன்று அங்கு நின்று தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில்வேனில் இருந்த சுப்பிரமணி (25), சேகர் (32), பிரேமா (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் செல்வி (35) என்பவர்மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிரிழந்தார்.
இவர்களில் சுப்பிரமணியும், சேகர், செல்வி ஆகியோர் பொன்னியம் மன்பட்டறையைச் சேர்ந்தவர்கள். பிரேமா மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 32 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் 14 பேர் நிலை மோசமாக உள்ளது. அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications