கர்நாடக அரசுக்கு மாநில திமுக முழு ஆதரவு!
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை முழுமையாகஆதரிப்பதாக கர்நாடக மாநில திமுக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக செயலாளர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் காலம் காலமாகவாழ்ந்து வருகிறார்கள். இம்மாநில நலன்தான் கர்நாடகத் தமிழர்களின் நலனும் ஆகும்.
எனவே கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த நலன் கருதி, காவிரி இறுதித் தீர்ப்பு குரித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கர்நாடக மாநில திமுக முழுமையாக ஆதரவளிக்கும், ஒத்துழைப்பு தரும்.
தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல, கன்னட மக்களும், தமிழ் மக்களும் பந்துக்குள்காவே இருக்க விரும்புகிறோம் என்று கிள்ளிவளவன்தெரிவித்துள்ளார்.
பந்த்துக்கு தமிழ்ச் சங்கம் ஆதரவு:
இதேபோல 12ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக பந்த்தில், தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1991ம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புவெளியானபோது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. முன்பு கலவரம் ஏற்பட்ட தமிழர் வாழும் பகுதிகளில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில்10 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விழிப்புணர்வு பற்றி தமிழர்களிடையேயும், பாதுகாப்புகள்குறித்தும் போலீஸாருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
நந்தினி லே அவுட், காவேரி நகர், கண்டீரவா நகர், கமலா நகர், காமாட்சிபாளையம், லக்கேரி, லட்சுமிதேவி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில்பொதுமக்களைச் சந்தித்து தமிழ்ச் சங்கக் குழுவினர் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு இதுதான் சொந்த மண். எனவே நாம் கன்னட மக்களுக்கோ, கன்னட மொழிக்கோ ஒருபோதும் எதிரிகள்அல்லர். எனவே பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் பந்த்தில் கர்நாடகத் தமிழர்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்சண்முகசுந்தரம்.
தமிழர் பாதுகாப்பு-கர்நாடக சட்டசபையில் பேச்சு
இந் நிலையில் கர்நாடக தமிழர்களும் கர்நாடக மக்களே, எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ரோஷன் பெய்க் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் விதாத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அறிவித்த பிறகு கர்நாடகாவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியுள்ளது. சட்டம் ஒழங்கை காப்பற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினரான தமிழர் பெரும் பீதி அடைந்துள்ளனர். பயந்து வாழ்கின்றனர். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும்கன்னடர்களே. எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் கூலி வேலை செய்வோர் தமிழர்கள். கட்டட தொழிலிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கும், உடமைக்கும் பயந்து கட்டிடகூலித் தொழிலாளர்கள் பலர் பெங்களூரை விட்டே வெளியேறியுள்ளனர்.
ஆகவே தமிழக்ளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் குமாரசாமி மேற்கொண்ட பாதுகாப்புநடவடிக்கையை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் குமாரசாமி பேசுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வரும் முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழியினரையும் பாதுகாக்க அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இதில் யாரும் கவலை பட தேவையில்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications