பெரியாறு: கேரள தலைவர்களுடன் காரத் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்,கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியை எச்சூரி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு சுமார்அரை மணி நேரம் நீடித்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவராகசென்னைக்கு வந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள சில முக்கிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட இக்குழு சென்னை வந்துள்ளது. சென்னை,எண்ணூர் துறைமுகம், சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை இக்குழுபார்வையிடவுள்ளது.
முதல்வரை சந்தித்தபோது காவிரி, முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்கவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.இப்போது அந்தத் தீர்ப்பு வந்து விட்டது. இந்த விஷயத்தில் மறுபடியும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் பிரகாஷ் காரத் பேச்சு நடத்தி வருகிறார்.விரைவில் இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றார் எச்சூரி.












Click it and Unblock the Notifications