ஆற்காடு கொடும்பாவி: வக்கீல்கள் மீது வழக்கு
சென்னை:அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் கொடும்பாவியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் எரித்தது, சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கியது தொடர்பாகஅதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீதிபதிகளை விமர்சித்துப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமியைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தின்போது வீராசாமியின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கொடும்பாவி எரிப்பைத் தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் என்பவர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்டஅதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு இணைச் செயலாளர் மோகன்தாஸ், ராஜேந்திர நரசிம்மன், ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications