அரசு நிலத்தை வளைத்த மன்சூர்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:அரசு நிலத்தை ஆக்கிரமித்து வேலி போட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை போரூர் பகுதியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களை சமீபத்தில் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர்இவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்லூர் என்ற இடத்தில் புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
![]() |
இந்த நிலையில் புதிதாக இடம் பெயர்ந்த ராம்குமார் என்ற வாலிபர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை, அதே பகுதியில் அரசுஒதுக்கிய இடத்தில் அடக்கம் செய்தனர்.திஇந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சிலருடன் அங்கு வந்தார். ராம்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தைச் சற்றிலும் வேலி போட்டார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு, ஏன் வேலி போட்டீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு மன்சூர், இது எனக்கு சொந்தமான இடம், பத்திரம் எல்லாம் பக்காவா இருக்கு, யாரும் இதை ஆக்கிரமிக்க முடியாது என்று கோபமாககூறியுள்ளார்.
![]() |
இதையடுத்து அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தகவல் அறிந்ததும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்குவந்தனர்.
அப்போது அவர்களிடம் இது எனக்குச் சொந்தமான இடம், இதை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. உங்களை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.
ஆனால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக மன்சூர் அலிகான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.














Click it and Unblock the Notifications