எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு: ரவுடி கைது
சென்னை:தன்னைப் பிடிக்க வந்த சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கவிக்குமாரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் கவிக்குமார். அப்பகுதியில் பிரபல ரவுடி. சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்பவர்களிடம்மாமூல் வாங்குவது அவரது வழக்கம்.
கவிக்குமார் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் சிக்காமல் டபாய்த்து வந்த கவிக்குமார், பிரிக்ளின் சாலை பகுதியில்நடமாடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று கவிக்குமாரை வளைத்தனர். அவரை பிடிக்க முயன்றபோதுதன்னிடமிருந்த அரிவாளால் சப் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டாலினை கவிக்குமார் வெட்டினார். இதில் சப் இன்ஸ்பெக்டரின் கையில் காயம்ஏற்பட்டது.
தாக்குதலைக் கண்டு பயப்படாமல் போலீஸார் கவிக்குமாரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications