அதிமுக வழக்கறிஞர்கள் மலர் தூவி போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:நீதிபதிகளை விமர்சித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதனமான முறையில் அதிமுகவழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

சில நீதிபதிகள் தமிழகத்தையே ஆள நினைப்பதாக ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டினார். அவரை ஆதரித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆற்காடு வீராசாமி அதை செய்துவிட்டார் என்றார்.

இதையடுத்து நீதித்துறையை அமைச்சரும் முதல்வரும் அவமதித்துவிட்டதாகக் கூறி அதிமுக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.நீதிமன்ற வளாகத்துக்குள் அவர் நடத்திய போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அடி, உதை விழுந்தது.

இந் நிலையில் இன்று தங்களது போராட்டத்தை நூதனமாக நடத்தினர். நீதிபதிகளுக்கு அதிமுக வழக்கறிஞர்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

நீதிபதிகள் நடந்து செல்லும் கோர்ட் வளாக பாதை முழுவதும் அதிமுக வழக்கறிஞர்கள் மலர்களை தூவி இருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகவேமலர் தோட்டம் போல காணப்பட்டது.

மலர்களின் வாசனையால் நீதிமன்றம் கமகமத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+