வைகோவின் பேச்சு கேலிக் கூத்து: பாஜக
Subscribe to Oneindia Tamil
சேலம்:திமுக அரசு ஆட்சியில் உள்ளதால், அனைத்து பிரச்சனைகளுக்கும் எதிர்ப்பு குரல் கொடுக்கக்கூடாது. வைகோவும், ஜெயலலிதாவும் இதைபுரிந்துகொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதை எண்ணாமல் ஜெயலலிதாவும், வைகோவும், இந்த தீர்ப்புக்கு எதிராக அறிக்கைவிடுவது கண்டிக்கதக்கது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் அபாயமுள்ளதாக வைகோ பேசியிருப்பது கேலியாக உள்ளது.
2 மாநிலங்களுக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பில் தேசிய ஒருமைப்பாடு எப்படி சீர்குலையும், தமிழகத்தில் திமுக அரசு உள்ளதால்அனைத்து பிரச்சனைகளுக்கும் எதிர்ப்பு குரல் கொடுக்கக் கூடாது, வைகோவும் , ஜெயலலிதாவும் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications