சென்னை தேர்தல்: 33 பேர் அன் அப்போஸ்டுதேர்வு-மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 33 பேர் போட்டியின்றித் தேர்வு பெற்றனர். இதன் மூலம்மாநகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றிவிட்டது.
![]() |
மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வரும் 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்தவேட்பு மனுக்கள் கடந்த 6ம் தேதி பரிசீலிக்கப்பட்டந.
7 மற்றும் 8 ஆகிய இரு நாட்களுக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும். நேற்று மாலை வரை 33 பேர் வேட்பு மனுக்களை வாபஸ்பெற்றுவிட்டனர். இதன் மூலம் முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியனின் வார்டு உள்பட 33 வார்டுகளில் போட்டியிட்ட திமுக கூட்டணிவேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்களில் திமுகவினர் 24 பேர், காங்கிரஸ் 6, பாமக 3 ஆவர்.
மாநகராட்சியில் ஏற்கனவே திமுக கூட்டணிக்கு 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இப்போது மேலும் 33 பேர் போட்டியின்றி தேர்வானதால் இக்கூட்டணியின் பலம் 88 ஆக உயர்ந்துவிட்டது. மாநகராட்சியை கைப்பற்ற 78 கவுன்சிலர்களின் பலமே போதுமானது என்பதால் மீண்டும் சென்னைமாநகராட்சி திமுக வசம் வந்துவிட்டது.
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்:
திமுக:
வார்டு எண் 8 - டன்லப் ரவி, 56 - லதாவாசு, 68- வசந்தி பரமசிவம், 74- ரமேஷ், 76 - சுமதி, 79 -அஞ்சலி தேவி, 81- மதன் மோகன், 84-மதிவாணன், 86 -சுரேஷ் குமார், 91 -தீபா, 92 -லலிதா, 104-எழிலரசன், 110- லில்லி சமாதானம், 111-செல்வி, 113- அன்புதுரை, 119-ராஜம், 120 -மணி, 127 -கருணாநிதி, 129 -முத்துவேல், 135- காஞ்சனா, 138- மேரி லூர்துசாமி, 13 9- மகேஷ் குமார், 140 - மா.சுப்ரமணியன், 141 - கென்னடி.
காங்கிரஸ்:
11 - கிருபாகரன், 20 - ரூப்சந்தர், 70 - சுரேஷ்பாபு, 109 -ஜானகி, 117 - விஸ்வநாதன், 123 -ஜெயகலா பிரபாகர்.
பாமக:
80 - ஏழுமலை, 134 - சத்தியமூர்த்தி, 137 - பிரேமா சக்கரபாணி.
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.சுப்ரமணியன் உள்ளிட்ட 33 பேருக்கும் நேற்று மாலை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 67 வார்டுகளுக்கு மட்டும் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 20ம் தேதி ஒட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
தேமுதிக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை மிரட்டியும், பண ஆசை காட்டியும் திமுகவினர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைத்தனர்என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. தேர்தலை புறக்கணித்துவிட்டன.
மேயர் பதவிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியமே நிறுத்தப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications