குவைத்: குறைந்த கட்டணத்தில் விமான பயணம்
துபாய்:குறைந்த கட்டணத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விமான பயணம் என்ற சலுகையை அறிவித்ததைத் தொடர்ந்த குவைத்தின் ஜஸீராஏர்வேஸ் நிறுவனத்தை ஆயிரக்கணக்கான பேர் முற்றுகையிட்டு டிக்கெட் கேட்டதால் அந்த நிறுவனத்தின் பணிகள் ஸ்தம்பித்தன.
குவைத்தைச் சேர்ந்த ஜஸீரா ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் (துபாயிலிருந்துஇந்தியாவுக்கு வர 48 தினார் மட்டுமே!) விமான பயண சலுகையை அறிவித்தது. மார்ச் 1ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரை இந்தசலுகையைப் பெறலாம் என அந்த நிறுவனம் அறிவித்தது.
பத்து லட்சம் பேருக்கு இந்த பயண சலுகைத் திட்டம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பேர் விமானநிறுவனத்தின் கால் சென்டர்களை போனில் தொடர்பு கொண்டு டிக்கெட் புக்கிங் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் போன் செய்ததால், ஜஸீரா நிறுவனத்தின் பணிகள் பாதிக்கப்பட்டு, கால் சென்டர்கள் ஸ்தம்பித்துப் போயின.
இதேபோல ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் இணைய தளத்தையும் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டதால் அதன் சர்வரும் ஸ்தம்பித்தது.
துபாயிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்தி வரும் ஒரே நிறுவனம் ஜஸீரா ஏர்வேஸ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டெல்லி, மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு துபாயிலிருந்து இந்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. குறைந்த விலைக்கட்டண சலுகைத் திட்டத்தின் கீழ் வருகிற ஜூலை மாதம் வரைக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம்.












Click it and Unblock the Notifications