நார்வே சென்றார் நளினியின் மகள் ஆரித்ரா!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யட்டு சிறையில் உள்ள நளினியின் மகள் ஆரித்ரா, இந்தியாவில் தங்கி படிக்க விசா கிடைக்கததால் அவர்நார்வே சென்றுள்ளார்.
![]() |
சிறையில் உள்ள நளினி-முருகன் தம்பதியின் மகள் ஆரித்ரா (13) இலங்கையில் படித்து வந்தார். அவரை இந்தியாவில் படிக்க வைக்க விரும்பியநளினியும், முருகனும் ஆரித்ராவுக்கு மாணவர் விசா கோரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் இலங்கையில்உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது.
![]() |
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நளினியும், முருகனும் வேலூர் சிறையில் தங்கள் மகளுக்கு விசா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம்இருந்தனர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அசோக்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இந்திய அரசின் விசா கிடைக்காது என்பதால், ஆரித்ராவை நார்வேயில் படிக்க வைக்க முடிவு செய்து அந்நாட்டு அரசிடம் விசாகோரினர். நார்வே அரசும் அதை ஏற்று ஆரித்ராவுக்கு விசா வழங்கியது. இதையடுத்து நார்வே நாட்டுக்கு ஆரித்ரா சென்றுள்ளார்.














Click it and Unblock the Notifications