சென்னையில் 31 சிறப்பு பொருளாதர மண்டலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையைச் சுற்றிலும் 31 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஆகியவை ஆகும்.

இதில் தாம்பரம்தான் (மெப்ஸ்) மிகப் பழமையான சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இங்கு உள்ளன,15,000 மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

தாம்பரம் சிறப்புப் பொருளாதர மண்டலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.

இதேபோல மேலும் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமிழகம் முழுவதும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 45இடங்களில் இந்த சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் அமையவுள்ளன.

இதில் சென்னையில் மட்டும் 31 மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன. இவை அனைத்தும் சென்னையைச் சுற்றிலும் உள்ள புறநகர்ப் புகுதிகளில்அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இதேபோல மதுரை, கோவை, திருச்சி, ஓசூர், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.

மத்திய அரசின் வர்த்தகத் துறையிடம் இதுதொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+