காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது
சென்னை:போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.
கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்ஜோசப்.
கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார்.அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது.
அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல,அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர முடியாது எனவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து தன் லண்டன் படிப்பை கைவிட்ட ஜோசப், இலங்கையில் இருந்து கனடா செல்ல விசா கிடைக்காததால் , 15 நாட்களுக்கு முன் சென்னைவந்து, டிராவல் ஏஜென்சி மூலம் ரூ. 2 லட்சம் கொடுத்து போலி விசா பெற்றார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் லங்கா விமானத்தில் கொழும்பு சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்றார்.மீனம்பாக்கம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஜோசப்பின் விசா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பயணிக்கவிடவில்லை.
பின்பு கனடா தூதரகத்திடம் விசாரித்ததில், அது போலி விசா என தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துஜோசப்பை ஒப்படைத்தனர். போலி விசா வைத்திருந்தற்காக ஜோசப்பை கைது செய்து, 15 நாள் புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு, போலி விசா வழங்கியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications