கோட்டம்-கோவை, சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சேலம் ரயில்வே கோட்டத்தை அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசைக் கண்டித்தும், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து புறக்கணித்துவரும் மத்திய அரசையும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநில அரசையும் கண்டித்து 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சேலம் மற்றும்கோவையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கோவை மாவட்டத்திற்கும், வட மாநிலங்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.ஆனால் ரயில்வே துறையோக கோவையை முற்றிலும் புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது.

தென்னக ரயில்வேயில் ஒலவக்கோடு (பாலக்காடு) என்ற இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நீண்ட காலமாக ரயில்வே கோட்டம் இயங்கிவந்துள்ளது. இதன் பெரும் பகுதிகள் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கியது.

கேரளப் பகுதியைச் சேர்ந்த நிலப்பரப்பு மிக மிக குறைவு. ஆனால் இக்கோட்டத்தின் பயன்கள், வசதிகள் அனைத்துமே கேரளாவுக்கே போய்ச்சேருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒலவக்கோடு கோட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒரு கோட்டத்தை சேலத்தைத்தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டு, அலுவலர்கள்,பணியாளர்கள் நியமிக்கப்பட்டும், கடந்த 15 நாட்களாக கேரள கம்யூனிஸ்ட் அரசு இதற்கான எதிர்ப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தப் போராட்டங்களுக்கு கேரள முதல்வரும், மாநில அரசும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாலக்காடு கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்கள்தான் அதிக வருவாயை ஈட்டித் தருகின்றன. ஆனால் நகராட்சிஅந்தஸ்தில் உள்ள பாலக்கோட்டில் கோட்ட அலுவலகம் உள்ளது.

பாலக்காடு ரயில் நிலைய வசதிகளைப் பார்க்கும்போது, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ரயில் நிலையங்கள் மிக மிகக் குறைவான வசதிகளுடன்உள்ளன.

அதுமட்டுமல்லாமல், பாலக்காடு ரயில் நிலையமும், கேரளத்திற்குள் வரும் பாலக்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களும் மாதிரிநிலையங்கள் என்ற அளவில் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.

வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில் நிலையங்கள் கேரளாவின் ஏதாவது ஒரு சிறு நகரத்தில் நின்று செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இப்படி தென்னக ரயில்வேகுக்கு வருவாய் ஈட்டித் தரும் நகரங்களாக கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகியவை இருந்தும் அந்தநகரங்களுக்கான ரயில் திட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.

எனவே இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு முடிவு கட்ட சேலம் ரயில்வே கோட்டை முழுமையாக, விரைவாக அமல்படுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்தில் புறக்கணிப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களை விரைவு படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலகட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 11ம் தேதி சேலத்திலும், 12ம் தேதி கோவையிலும் கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சேலம் போராட்டத்திற்கு செம்மலை தலைமை தாங்குவார். கோவை போராட்டத்திற்கு செங்கோட்டையன் தலைமை தாங்குவார் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+