தமிழகத்துக்கு எதிரான போக்கு-திருமா கவலை
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று சென்னையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், துணைப் பொதுச் செயலாளரும்எம்.எல்.ஏவுமான ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
நடுவர் மன்றத் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் (கெஜட்) வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் வழும்தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திருமாவளன் அப்போது கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தளவு இல்லை. இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா வகையிலும் தீர்ப்பைஎதிர்த்து தமிழக அரசு நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் ஆற்று நீர் உரிமை குறித்த அதிகாரங்களை பொதுப் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசுபட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாகும்.
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, பவானி போன்ற ஆற்று நீர் உரிமைகளில் தமிழகத்திற்கு எதிரான போக்கு நிலவுகிறது. மத்திய அரசு இதில்தீவிர கவனம் செலுத்தி தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications