3 சென்னை மாணவர்கள் சாத்தூர் விபத்தில் பலி

Subscribe to Oneindia Tamil

சாத்தூர்:சென்னை கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இங்கு தங்கிப் படித்து வந்த 18மாணவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று மாலை வேன் மூலம் அவர்கள் கன்னியாகுமரிக்குக் கிளம்பினர். இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்க்கரைபகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லையிலிருந்து மதுரை நோக்கி இரும்புக் கம்பிகளோடு வந்த லாரி வேன் மீதுபயங்கரமாக மோதியது.

இதில் முருகன், திருமலை, ஆனந்த் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களைஅந்தப் பகுதி மக்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

5 பேர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+