கால் சென்டர்களில் புகுந்த கன்னட அமைப்பினர்!பிபிஓ வாகனங்களை நிறுத்தி டயர்கள் புஸ்
பெங்களூரு:கர்நாடக பந்தையொட்டி பிபிஓ, கால் சென்டர்களையும் பணி செய்ய விடாமல் கன்னட அமைப்புகள் தடுத்தன.
இன்று அதிகாலையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெங்களூரு கால் சென்டர்கள் சிலவற்றிற்கு கர்நாடகக் கொடியுடன் (இந்தியாவின் வேறுஎந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கொடி கிடையாது) நுழைந்த கன்னட அமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறுமிரட்டியது.
இதனால் அவசர அவசரமாக அங்கிருந்து ஊழியர்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்றனர். ஆனால் ஊழியர்களுக்கான வாகனங்களையும்போராட்டக்காரக்கள் பயன்படுத்த விடவில்லை.
இதையடுத்து அவர்களிடம் அலுவலக நிர்வாகிகளும் ஊழியர்களும் கெஞ்சியதையடுத்து கர்நாடகக் கொடியைக் கட்டியபடி அந்த வாகனங்களைஇயக்க அனுமதித்தனர்.
அதே போல இன்று காலை கால் சென்டர்களுக்கு வேலைக்கு ஊழியர்களை அழைத்துக் கொண்டு வந்த டாடா இன்டிகா, சுமோ, குவாலிஸ் போன்றவாகனங்களை குறி வைத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் அவற்றின் டயர்களில் இருந்து காற்றை இறக்கிவிட்டனர்.
கையில் தடியோடு வாகனங்களை நிறுத்திய கும்பல்களைப் பார்த்து பல பெண் ஊழியர்கள் பயத்தில் அழுதனர். நடு வழியில் இறக்கிவிடப்பட்டபெண், ஆண் ஊழியர்கள் நடுங்கும் குளிரில், அச்சத்துடன் பல கி.மீ. தூரம் நடந்தபடியே வீடுகளுக்குத் திரும்ப நேரிட்டது. இதில் பெண் ஊழியர்கள்தான் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
ஐசிஐசிஐ ஒன் சோர்ஸ் கால் சென்டரில் புகுந்த கன்னட அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications