கருணாநிதிக்கு டிவி பிஸினஸே முக்கியம்-அதிமுக
சென்னை:காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், முதல்வர் கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சியின் பிசினஸைமனதில் கொண்டு தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என முன்னாள்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விளக்க பொதுக் கூட்டம் சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்தது. இதில் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைகளில் தமிழக உரிமைகளை கருணாநிதி விட்டுக் கொடுத்து விட்டார். இதற்கு முக்கியக்காரணம் கேரளாவிலும், கர்நாடகத்திலும் அவரது குடும்பத் தொலைக்காட்சிகள் இருப்பதுதான்.
எங்கே தான் நடவடிக்கை எடுக்கப் போய், குடும்பத் தொலைக்காட்சிகளுக்கு பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சித்தான் தமிழக நலனைவிட்டுக் கொடுத்து விட்டார், துரோகம் இழைத்து விட்டார்.
விரைவில் காலம் மாறும், காட்சி மாறும், ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.
2001ம் ஆண்டு கருணாநிதி செய்த நிதிக்குளறுபடியால் நிதிச் சரிவு ஏற்பட்டு அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் கூடத் தர முடியாமல், ரிசர்வ்வங்கியில் கடன் பெற்று தர வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை சீரடைந்தது. ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டது. ஆனால் இப்போதுமறுபடியும் கருணாநிதி அரசின் போலி இலவசத் திட்டங்களால் கையிருப்பு கரைந்து திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் பன்னீர் செல்வம்.
கூட்டத்தில் மறைந்த காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications