கருணாநிதி, ஆற்காடு மீது அதிமுக வழக்கு
சென்னை:நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் முதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பிப்ரவரி 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நீதித்துறை குறித்தும், நீதிபதிகள் குறித்தும் முதல்வர்கருணாநிதியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளன.
நீதித்துறையின் நடவடிக்கையில் தலையிடும் செயலாகவே இதைக் கருத வேண்டும். இருவ>ன் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள் நீதித்துறையின்செயல்பாட்டை இருவராலும் சகித்துக் கொள்ள முடியாத தன்மையையே காட்டுகிறது.
எனவே இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications