சமூக பாதுகாப்பு திட்டம்: 22ம் தேதி தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 22ம் தேதி தஞ்சையில் தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலம் காக்க விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது.

இந்த வாரியத்திற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூக பாதுகாப்பு நல உதவிச் சட்டம்சட்டசபையில் இயற்றப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு ஏறத்தாழ 72 லட்சம் குடும்பங்களுக்குபுகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின்படி விவசாய தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விபத்து நிவாரண உதவி, இயற்கை மரணம் நிகழ்ந்தால் உதவி, அவர்களின்குழந்தைகளுக்கான படிப்பு நிதியுதவி, மகன், மகள் ஆகியோரின் திருமணத்திற்கான உதவி;

கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை, 60 வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், ஈமச் சடங்கிற்கான உதவித்தொகை என பல்வேறு உதவிகளை வழங்கிடவும், நேரடியாக பயிரிடுதலை மேற்கொண்டுள்ள பதிவு பெற்ற பயிரிடும் குத்தகைதாரர்கள் இந்தஉதவிகளைப் பெரவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்த முதல்வர் கருணாநிதி வருகிற 22ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகளைவழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+