கோவை குண்டு வெடிப்பு தினம்-தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், கோவை நகரில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில்50க்கும் மேற்பட்டோர் உயி>ழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் கோவை நக>ல் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள்உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டஇடங்களில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications