தமிழகத்தில் ஹெல்மெட் விலை கிடுகிடு உயர்வு!!
சென்னை:தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகப் போவதையடுத்து அதன் விலையை இப்போதே உயர்த்திவிட்டனர் வியாபாரிகள்.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக் அக வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி என்பவர் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், வாகனம்ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு பதில்தெரிவித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், வியாபாரிகள் ஹெல்மெட் விலையை கிடுகிடுவென உயர்த்திவிட்டனர்.நேற்று வரை வாங்க ஆளில்லாமல் ரூ. 300க்கும், 400க்கும் விற்று வந்த ஹெல்மெட் விலை இப்போது ரூ. 600 ஆகிவிட்டது. கொஞ்சம் ஸ்டைலானஹெல்மட் என்றால் ரூ. 1,000 வரை விலை சொல்கிறார்கள்.
மேலும் நடைப்பாதைகளிலும் ஹெல்மட் கடைகள் முளைத்துவிட்டன. இங்கு விற்பனையாகும் ஹெல்மட்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.பெரும்பாலும் போலி தான்.
தமிழகத்தில் அரசின் கணக்குப்படி 73 லட்சம் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. அதில் பெரும்பாலானவர்களிடம் ஹெல்மட் கிடையாது. ஒருவண்டிக்கு இரண்டு ஹெல்மட்கள் தேவைப்படும் என்ற நிலையில் ஹெல்மட் விற்பனை உச்சத்தைத் தொடவுள்ளது.
இதனால் தரமான ஹெல்மெட்டை அரசே விற்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. கெடு நெருங்க நெருங்க ஹெல்மட்கள் விலைமேலும் உயரக் கூடும்.












Click it and Unblock the Notifications