வித்தவுட்டில் போன லாலு மாமனார், மாமியார்
பாட்னா:பீகாரிலிருந்து டெல்லிக்கு சென்ற ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த மத்திய ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மாமனாரும், மாமியாரும் பிடிபட்டனர்.
லாலுவின் மாமனார் சிவப்பிரசாத் செளத்ரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர்.
முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாக ஒரு தனியார்தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தகவல் சென்றது.
இதையடுத்து அந்த நிறுவனத்திலிருந்து கேமராமேன் சகிதம் செய்தியாளர் விரைந்து வந்தார். தகவல் பரவி மேலும் பல பத்திரிக்கையாளர்களும்,புகைப்படக் கலைஞர்களும் விரைந்து வந்தனர்.
சாப்ரா ரயில் நிலையத்தில் (இதுதான் லாலுவின் தொகுதி) ரயில் நின்றபோது டிக்கெட் பரிசோதகர் லாலு மாமனார், மாமியாரிடம் டிக்கெட்கேட்டபோது அவர்கள் டிக்கெட் எடுக்காதது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார். அதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் சில நிமிடங்களில் கதை தலைகீழாக மாறியது.
அதே டிக்கெட் பரிசோதகர், இருவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவசரமாக ரயிலில் ஏறி விட்டதால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. எனவேஅவர்களிடம் டிக்கெட்டுக்கான கட்டணம் மட்டும் பெறப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கருத முடியாதுஎன்று கூறி விட்டு அங்கிருந்து நழுவி விட்டார் அந்த பரிசோதகர்.அதன் பின்னர் லாலு மாமனாரும், மாமியாரும் தொடர்ந்து அதே ரயிலில் பயணம் செய்தனர்.












Click it and Unblock the Notifications