ஜீப்-பஸ் மோதல்:அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தராம்பாள், அவரது கணவர் உள்பட 6 பேர் பலியாயினர்.
சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பான பிரச்சனையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் இன்று கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மேட்டூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தராம்பாள், அவரது கணவர் மாரப்ப கவுண்டர் மற்றும் 5 அதிமுகவினர் ஜீப் மூலம்சொந்த ஊரான தாரமங்கலத்துக்கு திரும்பினர்.
ஜீப்பை மாரப்ப கவுண்டர் தான் ஓட்டினார். அணைமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வந்துகொண்டிருந்த அரசு பஸ்சும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஜீப் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது.
இதில் சுந்தராம்பாள், மாரப்ப கவுண்டர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.












Click it and Unblock the Notifications