நளினி மகள் விவகாரம்-மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:நளினியின் மகளை இந்தியாவில் தங்கி படிக்க ஏன் அனுமதிக்க கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்ட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருடையகணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தங்கள் மகள் ஆரித்ராவுக்கு இந்தியாவில் தங்கி படிக்க விசா அளிக்கும்படி மத்திய அரசுக்கு இவர்கள் விண்ணப்பம் செய்தனர்.ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்தது. இதையடுத்து விசா அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினிமனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நளினி மேல் முறையீடு செய்தார். அதில் என்னுடைய மகள் ஆரித்ரா இந்தியாவில் தான் பிறந்தார். எனவே அவள்இந்தியாவில் தங்கி படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏபி.ஷா, நீதிபதி சந்துருஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நளினி சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாத், நளினியின் மகள் ஆரித்ரா இந்தியாவில்தான் பிறந்தாள். நளினி சிறையில் இருக்கும்போதுஇந்த குழந்தை பிறந்தது. தற்போது அவளுக்கு 13 வயதாகிறது. படிப்பதற்காக ஆரித்ரா இலங்கை சென்றாள். இப்போது இந்தியாவில் தங்கி படிக்கவிரும்புகிறாள். அதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வாதாடினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஆரித்ரா இலங்கை குடியுரிமை பெற்றுள்ளார். தற்போது அவர் நார்வேநாட்டில் படிப்பதற்காக அவர் சென்று விட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. ஆரித்ராவின் இலங்கை குடியுரிமையை ரத்து செய்து விட்டு,இந்திய குடியுரிமை கேட்டு மனு செய்தால் பரிசீலனை செய்வோம். எனவே அவருக்கு இப்போது விசா வழங்க முடியாது என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆரித்ராவுக்கு இந்தியாவில் தங்கி படிக்க ஏன் அனுமதி அளிக்கக் கூடாது என்பதற்கு வரும் 16ம்தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications