பங்குகள் வெளியிடும் ராஜ் டிவி
சென்னை:தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் 2வது இடத்தில் இருக்கும் ராஜ் டிவி பங்கு மார்க்கெட்டில் குதித்துள்ளது.
இதுகுறித்து ராஜ் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு ஷேர் மதிப்பு ரூ. 10 என்ற அளவில்தொடக்கத்தில் 35 லட்சத்து 68 ஆயிரத்து 250 பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராஜ் டிவி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகபங்கு மார்க்கெட்டில் கால் எடுத்து வைக்கிறோம்.
தயாரிப்பு வசதிகள், நிகழ்ச்சிகள், புதிய இளைஞர் சானல், சர்வதேச சந்தையில் தற்போதுள்ள சேனல்களை பிரபலப்படுத்துவது, குறும்படங்கள்,டெலிபிலிம் தயாரிப்பு, ரூ. 7.15 கோடி மதிப்பிலான புதிய நவீன ஸ்டுடியோ அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்தப் பங்குககள் மூலம் நிதிதிரட்டப்படும்.
ஒவ்வொரு சம பங்குக்கும் ரூ. 221 முதல் ரூ. 257 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி) இந்த பங்குககள் விற்பனைக்குவருகின்றன. பிப்ரவரி 23ம் தேதி பங்குகளை வாங்க விண்ணபிக்க கடைசி நாளாகும்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இந்த பங்குகள் பட்டியலிடப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் 14 முதல் 40 வயதுக்குட்பட்டோருக்கான புதிய இளைஞர் சானல் தொடங்கப்படவுள்ளது.அதேபோல நவீன முறையில் வடிவமைக்கப்படவுள்ள ஸ்டுடியோவும் இந்த ஆண்டுக்குள் திறக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.
நிறுவனத்தின் துணைத் தலைவர் சத்யப்பிரகாஷ் கூறுகையில், கடந்த 2005-06ம் ஆண்டு ராஜ் டிவி ரூ. 31.95 கோடி வருமானம் ஈட்டியது. அதற்குமுந்தைய ஆண்டு அது 29.64 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் வரை மொத்த வருமானம் ரூ. 30 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டுக்குள்கடந்த ஆண்டை விட கூடுதலான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications