ராமர் கோவில் கட்ட வேண்டும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
ஜபல்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆன்மீகத் தலைவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ரவிசங்கர்கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவிசங்கர் கூறுகையில், ராமர் பிறந்த இடம் அயோத்தி. எனவே அனைவரின் ஒப்புதலோடு அங்கு ராமருக்கு கோவில் கட்டப்படவேண்டும்.
பல்வேறு மதத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கருத்து வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முயற்சிக்கவேண்டும்.
மனிதகுலத்தை உயர்த்தும் ஒப்பற்ற பணியில் பல முனிவர்கள், ரிஷிகள் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா ரஜனீஷ், மக>ஷி மகேஷ் யோகி ஆகியோர்இந்த வ>சையில் முக்கிய இடம் பெறக் கூடியவர்கள்.
கிருஷ்ணர், ராமர், சீதை உள்ளிட்டோர் அவத>த்த பூமி இது. அவர்களின் கதைகள் அனைத்துத் தலைமுறையினருக்கும் பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன. அவை அனைத்தையும் நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டு, எல்லை தாண்டாத வகையில் பின்பற்ற வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்குப் பதில் நமது கலாச்சாரத்தை மதித்து நடக்க முயற்சிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.












Click it and Unblock the Notifications