நாளை 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச டிவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:இரண்டாம் கட்டமாக இலவச வண்ண தொலைகாட்சிகள் வழங்கும் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கிவைக்கிறார்.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இலவச வண்ண தொலைகாட்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாநிலம்முழுவதும் 30,000 குடும்பங்களுக்கு டிவிகள் வழங்கப்பட்டன.
இந் நிலையில் 2ம் கட்டமாக 25 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச டிவி வழங்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் அருகே உள்ள பம்மதுகுளம் கிராமத்தில் நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து டிவிகளைவழங்குகிறார்.
அதே போல தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் இலவச வண்ண தொலைகாட்சிகளை வழங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications