தமிழன் டிவியில் வீரப்பன் டிவி சீரியலுக்கு தடை!
சென்னை:தமிழன் தொலைக்காட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த தொடரை ஒளிபரப்ப சென்னை நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார். அதில், எனது கணவ>ன் பெயரிலோ அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றின்அடிப்படையிலோ, எனது எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் டிவி தொடர்களை எடுக்கக் கூடாது,ஒளிபரப்பக் கூடாது.
ஆனால் தமிழன் தொலைக்காட்சியில் வீரப்பன் கதையை தொடராக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.
மாவீரன் என்ற பெயரில் இன்று முதல் அந்த தொடர் வெளியாகப் போகிறது. இதன் மூலம் எனது கணவரின்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனது மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த மாதம் 13ம் தேதி இந்தத் தொடரை ஒளிபரப்ப தடை விதித்துஉத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications