ராட்சத சிமென்ட் குழாய் விழுந்து 3 பேர் பலி
சென்னை:சென்னை அருகே ராட்சத சிமெணட் குழாய் கீழே விழுந்ததில் அதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
சென்னை அருகே பள்ளிக்கரணை, கைவேலி பகுதியில், தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை அகற்றி விட்டு அவற்றை உயரமான இடத்திற்குமாற்றும் பணியில் மின்வாரியம் இறங்கியுள்ளது.
இதற்காக பள்ளண் தோண்டப்பட்டு அதில் மின்சாரக் கம்பங்களை நிறுவ ராட்சத சிமெண்ட் குழாய் பதிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்றுஈடுபட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக இப்பணி நடந்து வருகிறது.
நேற்று இந்தப் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் சரிவு ஏற்பட்டு ராட்சத குழாய் தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், 4பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
குழாய்க்கு அடியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்தது. இதில், ஆரோக்கியசாமி என்பவர் படுகாயத்துடன் உயிருடன்மீட்கப்பட்டார். வனத்தையன், சகாயம், பாட்சா ஆகியோர் பலியாகி விட்டனர். இவர்களில் வனத்தையன் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றஇருவரின் உடல்களும் குழாய்க்கு அடியில் சிக்கி நசுங்கி விட்டன. அவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருவரது உடல்களையும் மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பலியான 3 பேரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications