வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.5 லட்சமாகிறது
டெல்லி:வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது. இதுதொடர்பான அறவிப்பு பட்ஜெட் உரையில் இடம் பெறவுள்ளது.
2007-08ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற 28 ம்தேதி நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில்இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.
மாத சம்பளம் பெறுவோர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போது ரூ. 1 லட்சமாக உள்ளது. பெண்களுக்கு ரூ.1.35 லட்சமாகவும் மூத்தகுடிமக்களுக்கு ரூ.1.85 லட்சமாகவும் இருக்கிறது.
இதை ரூ. 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி உயர்த்தப்படும்போது பெண்களுக்கு ரூ. 2.75 லட்சமாகவும், மூத்தகுடிமக்களுக்கு ரூ. 4 லட்சமாகவும் வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கும்.
பணவீக்க விகிதம் 5% உயர்ந்திருப்பதால், வருமானவரி விலக்கு உயர்த்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications