காதலிக்க வற்புறுத்தி மாணவி அறையில் அடைப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:சட்டக் கல்லூரி மாணவியை வகுப்பறையில் அடைத்து வைத்து காதலிக்க வற்புறுத்திய ஐந்து மாணவர்களைபோலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவரதுமகள் பிரேம சங்கீதா (வயது 18) புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே கல்லூ>யில் இறுதி ஆண்டு படித்து வரும் முகம்மது உசேன், புஷ்பராஜ், தமிழரசன், வசந்தன்,திருகாமேஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் திருகாமேஸ்வரன், பிரேமசங்கீதாவைக் காதலித்துள்ளார். ஆனால் அதை சங்கீதா ஏற்கவில்லை.

இந்த நிலையில் காதலர் தினமான செவ்வாய்க்கிழமையன்று மாலை 3 மணிக்கு பிரேம சங்கீதா தனதுவகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது திருகாமேஸ்வரன் அண்ட் கோ அங்கு வந்துள்ளது.

அங்கிருந்து சங்கீதாவை தங்களது வகுப்பறைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். திருகாமேஸ்வரனைகாதலிக்குமாறு கூறி பிரேம சங்கீதாவை, நண்பர்கள் நான்கு பேரும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்மறுக்கவே, கோபமடைந்த அவர்கள் சங்கீதாவை வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டி விட்டனர்.

பயந்து போன பிரேம சங்கீத கூச்சல் போட்டு அலறியுள்ளார். இதையடுத்து கல்லூரி வாட்ச்மேன் அங்கு வந்துகதவைத் திறந்து சங்கீதாவை மீட்டார்.

பின்னர் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் கதறி அழுது கொண்டே நடந்ததைக் கூறினார்பிரேம சங்கீதா.

இதைத் தொடர்ந்து காலாப்பட்டு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த ஐந்து மாணவர்களும்தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+