போலீசார் மீது கள்ளச் சாராய கடும் தாக்குதல்
விழுப்புரம்:விழுப்புரத்தில் கள்ளச் சாராயக் கும்பல் நடத்திய திடீர் தாக்குதலில் 4 போலீஸார் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தேவராஜ், அய்யனார், குமார் மற்றும் பச்சையப்பன் ஆகியோர்அடங்கிய போலீஸ் படை கள்ளச் சாராய வழக்கில் தேடப்பட்டு வரும் முருகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைத் தேடி விழுப்புரம் வந்தது.
இவர்களின் தீவிர வேட்டையில் இன்று காலை 6 மணியளவில் கள்ளிப்பாடி என்ற கிராமத்தில் வைத்து முருகன் சிக்கினார். அப்போது ஒரு கும்பல்அங்கு வந்து போலீஸார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த கள்ளச்சாராய கும்பல்முருகனை மீட்டுக் கொண்டு தப்பி விட்டது.
கள்ளச் சாராயக் கும்பலின் தாக்குதலில் காவலர் அய்யனார் படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தஅனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளச் சாராயக் கும்பலால் போலீஸார் தாக்கப்பட்டது விழுப்புரம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications