75 வயது பாட்டியை தாக்கி 30 பவுன் கொள்ளை
சென்னை:வீட்டில் தனியாக இருந்த 75 வயது பாட்டியைத் தாக்கி 30 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற திருடனை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 75). சுப்பு லட்சுமியின் மகன் வெங்கடேசன், அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் ராதாவங்கியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 3ம் தேதி கணவனும், மனைவியும் வேலைக்குப் போய் விட்டனர். சுப்பு லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு இளைஞர் அங்குவந்துள்ளார். தனியாக இருந்த பாட்டியை கட்டையால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை திருடிச் சென்றார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். இதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ஜான்இளமாறன், நோட்டம் பார்த்து விட்டு திருட வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜான் இளமாறனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், குடும்ப வறுமை காரணமாக திருடி விட்டதாக தெரிவித்தார். அவர்திருடிய 30 பவுன் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications