கர்நாடக தமிழர் நலன்-வைகோ உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி மதிமுக சார்பில் வரும் 17ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறுகிறது. இதில் வைகோவும் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு, கர்நாடகத்துக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ள போதிலும், கர்நாடகத்தில்தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கிறது.

1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு,கோடிக்கணக்கில் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, எண்ணற்றவர்கள் அகதிகளாகத் தமிழகம் வர நேர்ந்த பெருந்துயர் மீண்டும் நிகழக் கூடும் என்றபலத்த பீதிக்கும், அச்சத்துக்கும் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

எனவே கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

காவி>ப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகத்தை சுட்டிக் காட்டி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும்,கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம்அருகே எனது தலைமையில் மதிமுக உண்ணாவிரதப் பாராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+