பெங்களூருக்கு பஸ் போக்குவரத்து சீரடைந்தது!
ஓசூர்:கிட்டத்தட்ட 11 நாள் தடங்கலுக்குப் பின்னர் தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டதால் தமிழகத்திலிருந்து வாகனப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
தமிழகப் பதிவு எண் கொண்ட லாரிகள், பேருந்துகள், வாகனங்கள் ஓசூரைத் தாண்டி செல்ல முடியாமல்முடங்கிக் கிடந்தன. கர்நாடக பதிவு எண் கொண்ட தனியார் ஆம்னி பஸ்கள் மட்டுமே பெங்களூருக்குள்வந்தன.
இதனால் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு பல கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந் நிலையில் நேற்றுமாலை முதல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் பெங்களூருக்குள் செல்லத் தொடங்கின.
இதேபோல பேருந்துப் போக்குவரத்தும் சீரடைந்துள்ளது. பேருந்துப் போக்குவரத்து சீரடைந்ததைத் தொடர்ந்துபெங்களூருக்குச் செல்ல வேண்டியவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications