கூடங்குளம்: நாடு தழுவிய போராட்டம்-மேதா

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் (நெல்லை):கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்த நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் இயக்கங்களின்தேசிய கூட்டமைப்புத் தலைவர் மேதா பட்கர் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளதில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மேதா பட்கர்தலைமையில் கூடங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Metha

இந் நிலையில் மேதா பட்கர் கூறுகையில், அணு மின் நிலையங்கள் நமது நாட்டுக்கு உகந்தவையல்ல, ஆபத்தானவை. இங்கு அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்கள் மக்களின் வாழ்வு>மைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.

குஜராத் மாநிலம் கக்ரடார், மும்பை அருகே தாராப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையங்களால்அப்பகுதிகளில் அணுக் கதிர் வீச்ச ஏற்பட்டு மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதேபோல, ஜார்க்கண்ட மாநிலத்தில் சுடுகுடா என்ற இடத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்குபல்வேறு நோய்கள் உருவாகின்றன.

குறைப் பிரசவம் அதிகரிக்கிறது. புற்றுநோய், மூளை வளர்ச்சியின்மை ஆகியவை அதிகரிக்கின்றன.

அணு மின் நிலையங்களால் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மீன் வளம் குறையும். கூடங்குளத்தில் அணு உலைகள் அமைப்பதுதொடர்பாக வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அணு மின்நிலையம் அமைப்பதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் ஆக்ஷன் 2007 என்ற பெயரில் போராட்டம் நடத்துவோம் என்றார் மேதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+