அதிமுகவினரின் மிரட்டலும், பண பேரமும்

Subscribe to Oneindia Tamil

சேலம்:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இருந்து தப்ப பலியான மாணவிகளின் பெற்றோரை அதிமுகவினர் மிரட்டி பணிய வைக்க முயன்றுள்ளனர். அதுமுடியாமல் போகவே பண பேரம் பேசியுள்ளனர்.

வீராசாமியிடம் விலை பேசிய பாதகர்கள்:Kokilavanis father Veeraswamyதீர்ப்பை கேட்க சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில்,

இது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாதுப்பா (உடைந்து அழுகிறார்). அதற்காகத் தான் நான் உயர் நீதிமன்றம் வரை சென்றேன்.ஆனால், வழக்கை அப்படியே விட்டுவிடும்படி என்னை அதிமுகவினர் மிரட்டினார்கள்.

அது முடியாமல் போகவே என்னிடம் விலை பேசினார்கள். இது விலை கொடுத்து முடிகிற பிரச்சனையா (கொதிப்புடன் பேசுகிறார்). அதிமுகவினர்அனுப்பிய கோடீஸ்வரர்கள் எல்லாம் என் வீட்டுக்கு வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.

என் மகள் சாவுக்கு நியாயம் வேண்டும், வெளியே போ என்று என்று அவர்களை எச்சரித்து அனுப்பினேன் என்றார்.

வீராசாமியால் தான் வழக்கு இவ்வளவு தூரம் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஹேமலதாவின் தந்தை கண்ணீர்:

பலியான இன்னொரு மாணவியான ஹேமலதாவின் தந்தை கேசவ சந்திரன் சென்னை இந்தியன் வங்கி கிளையொன்றில் துணை மேலாளராகஉள்ளார். தீர்ப்பை கேட்க நீதிமன்றத்துக்கு வந்திருந்த இவர் பாதி நேரம் அழுதபடியே தான் இருந்தார்.

Father of Hemalatha KesavaChandranஅவர் கூறுகையில், எனக்கு 5 குழந்தைகள். 3வது பெண் தான் ஹேமலதா (சொல்லும்போதே அழுகிறார்). இந்த வழக்குக்கு எத்தனை பிரச்சனைகள்,கடவுளே. ஆனால் இந்த வழக்கு முடிவுக்கு வர முக்கிய காரணம் உயர் நீதிமன்ற நீதிபதி கனராஜ் தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றுதெரியவில்லை என்றார்.

காயத்ரியின் தந்தை வெங்கடேசன் பேட்டி:

அதே போல இன்னொரு மாணவியான காயத்ரியின் தந்தை வெங்கடேசன், தாயார் கெளஞ்சயம்மாள். வெங்கடேசன் விருத்தாசலம் கல்லூரியில்முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Gayatris father Venkatesanதீர்ப்பு வெளியான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த இந்தத் தம்பதி கண்ணீரை நிறுத்த நெடு நேரம் ஆனது. பின்னர் வெங்கடேசன்கூறுகையில்,

எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வரக் கூடாது சாமி. நீதிபதி கிருஷ்ணராஜா உருவத்தில் கிருஷ்ணபரமாத்வே வந்து தீர்ப்புகொடுத்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இந்த வழக்கை முடக்க பணமும், படை பலமும், அரசியல் பலமும் இறக்கிவிடப்பட்டன. சாட்சிகளை மிரட்டினார்கள், அவர்களை பிறழவைத்தார்கள். இதைப் பார்த்த நாங்கள், இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்றே நினைத்தோம். ஆனால் தீர்ப்பின மூலம் நீதியும் ஆண்டவனும்இருப்பது உண்மை என்று உறுதியாகிவிட்டது.

என் பொண்ணு துடிதுடித்து இறந்தது மாதிரி இந்த பாவிகளும் துடிதுடித்து இறக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கே போனாலும் இந்தத் தீர்ப்புபாதுகாக்கப்பட வேண்டும் என்றார் உதடு துடிக்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+