காவிரி: கர்நாடகத்தில் மீண்டும் சாலை மறியல்
மைசூர்:கர்நாடக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காவி> நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக காவி>ப் பாசனப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களாக தீவிரம்குறைந்திருந்த போராட்டம் இன்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ்கர் ஆகிய மாவட்ட விவசாயிகள், பெங்களூர்-மைசூர் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
மாண்டியா மாவட்டத்தில் பூதனூர், பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டனா, கெஜ்ஜலிகரே, மலவள்ளி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில்குதித்தனர். இதனால் பெங்களூர்-மைசூர் சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைசூரில், ராஜஸ்தான் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தினர், ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் குதித்தனர்.
சில்வர் ஜூப்ளி பார்க் பகுதியில், காவிரி ஹிதரக்ஷன சமிதி சார்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications