கேரள கம்யூ தலைவரின் சூட்கேஸில் தோட்டாக்கள்
சென்னை:கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன், துப்பாக்கித் தோட்டாவுடன் விமானம் ஏற வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தோட்டாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருப்பவர் பினராயி விஜயன். இவர் நேற்று மாலை டெல்லிக்குச் செல்லசென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவரது சூட்கேஸை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் .033 துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ஐந்து தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயனிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு விஜயன், கேரளாவிலிருந்து தான் ரயிலில் வந்ததாகவும், தோட்டாக்கள் எப்படிவந்தன என்று தனக்குத் தெரியாது எனவும் தெ>வித்தார். தன்னிடம் கைத்துப்பாக்கி உள்ளது எனவும், அதற்கு உரிய லைசன்ஸ் இருப்பதாகவும்விஜயன் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடமிருந்த தோட்டாக்களைப் பறிமுதல் செய்து கொண்ட அதிகாரிகளிடம் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்ட பின்னர் டெல்லிசெல்ல அனுமதித்தனர். ஆனால் அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் வேறு விமானத்தில் விஜயன் சென்றார்.
பிரபல கம்யூனிஸ்ட் தலைவ>ன் சூட்கேஸில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கும் கேரள முதல்வர் அச்சுதானந்தத்துக்கும் ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவியை விஜயன் தான் குறி வைத்தார்.ஆனால், அச்சுதானந்தன் வென்றுவிட்டார்.
இரு தரப்புமே ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரக்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications