மன நிலை பாதிக்கப்பட்ட கோகிலவாணியின் தாய்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:தர்மபுரி பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தாயார் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
7 வருடத்துக்கு முன் இதே பிப்ரவரியில் மகள் எரிந்து போனதைக் கேள்விப்பட்ட பின் பிரமை பிடித்த நிலைக்குப் போன இவர் இன்னும்மீளவேயில்லை.
தனது மகளையும் இழந்து, மனைவியும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வழக்கு அதிமுகவினருக்கு சாதகமாக அரசாலும் போலீசாலும்திருப்பப்பட்டபோது தான் கொதித்து எழுந்தார் கோகிலவாணியின் தந்தை வீராசாமி.
உயர் நீதிமன்றத்தை அணுகி அவர் வைத்த கண்ணீர் கோரிக்கை நீதிமன்றத்தை உலுக்கி வழக்கை சேலத்து மாற்ற வைத்தது.
நேற்றும் முன் தினமும் கோகிலவாணியின் தாயார் டிவியை விட்டு நகரவில்லையாம். அங்கேயே அமர்ந்தபடி இந்த வழக்கின் தீர்ப்பு மற்றும்தண்டனை குறித்த செய்திகளை பார்த்தபடியே அமர்ந்திருந்தாராம் இந்த மன நிலை பாதிக்கப்பட்ட தாயார்.












Click it and Unblock the Notifications