கோபி-மின் வேலியை மிதித்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோபி:கோபிச்செட்டிப் பாளையம் அருகே விவசாய நிலத்தில் மின்சார வேலியை தொட்ட 3 பேர் பலியாயினர்.
இப் பகுதியில் உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள், காட்டெருமை, காட்டுப் பன்றிகள் ஆகியவை நுழைந்து துவம்சம் செய்து வருவதால் பலதோட்டங்களில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு அனுமதியோடும், அனுமதி இல்லாமலும் இந்த வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் பங்களாபுதூர் அருகே சஞ்சீவிராயன்கோவில் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), மாதேஷ் (43), மூர்த்தி (20) ஆகியோர் நேற்றிரவுஅழகன்காடு பகுதிக்குச் சென்றனர். பின்னர் குறுக்குப் பாதை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு தோட்டத்துக்குள் புகுந்து நடந்த அவர்கள் தெரியாமல் அலுமினிய மின்சார கம்பி வேலியில் கால் வைத்துவிட்டனர். இதில் மூவரும் உடல்கருகி அந்த இடத்திலேயே பலியாயினர்.












Click it and Unblock the Notifications