பொய் சொன்ன இந்தியருக்கு அபராதம்
சிங்கப்பூர்:அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்ததாக பொய் சொன்ன ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ.பட்டதாரிக்கு சிங்கப்பூரில் 6000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாராயணன். 1989ம் ஆண்டு இவர் ஹைதராபாத் உஸ்மானியாபல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். அதன் பின்னர் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தார்.
வேலைக்காக அவர் விண்ணப்பித்தபோது அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்ததாககூறியிருந்தார். அதன் பின்னர் வேலைக்கு சேர்ந்தார். தற்போது தாவ்கா என்ற வர்த்தக நிறுவனத்தில் நிர்வாகஇயக்குநராக உள்ளார்.
மகேஷ் வேலைக்கு சேர்ந்தபோது கொடுத்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்த தகவல்களை அந்நாட்டு தொழிலாளர்நலத்துறை அதிகாரிகள் சரி பார்த்தபோது அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்ததாக மகேஷ் கூறியிருந்தது பொய்எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மகேஷுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் நிலை இருந்தது.
இந்த நிலையில் மகேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிலிப் ஜெயரத்னம் வாதிடுகையில், தனது படிப்புச்சான்றிதழ்களோடு தவறான ஆவணங்களை மகேஷ் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், தொழிலாளர் நலத்துறை மகேஷின் கல்விச் சான்றிதழ்களைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தவும் இல்லை.
மிக்ச சிறந்த திறமைசாலி மகேஷ். சிங்கப்பூரில் தனது நிர்வாகத் திறமையை நிரூபித்து பெயர் பெற்றவர். சிங்கப்பூரின்தாங் வம்சத்தைச் சேர்ந்த 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள கலைப் பொருட்களை விற்க துணை புரிந்து, சிங்கப்பூர்பொருளாதாரத்திற்கும் அவர்பங்காற்றியுள்ளார்.
அவரது சாதனையைப் பார்த்து விட்டு கோர்ட் எதையும் தீர்மானிக்க வேண்டும் என்று வாதாடினார். அவரது வாதத்தைக்கேட்ட சிங்கப்பூர் நீதிமன்றம், மகேஷுக்கு 3000 டாலர் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் பொய்யான தகவலைக் கூறியதற்காக 68 பேருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications