பஸ் மோதி 2 எம்.பி.ஏ. மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அருகே பல்லாவரத்தில் நடந்த சாலை விபத்தில் 2 எம்.பி.ஏ. மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தவர்கள் தியாகராஜன் மற்றும் பிரவீண். இருவரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தனர்.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த பஸ் மோதி இருவரும் சாலையோரம் இருந்த முட்புதரில்தூக்கி வீசப்பட்டனர்.
தூக்கி வீசப்பட்ட வேகத்தில் இருவரும் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் இருஉடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications