குடியரசுத் தலைவராகும் தகுதி இல்லை: அமிதாப்
மும்பை:குடியரசுத் தலைவர் பதவிக்குரிய தகுதி எனக்கு இல்லை, எனவே குடியரசுத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று நடிகர்அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் கலாமை நிறுத்த பல தரப்பிலும் ஆதரவுபெருகி வருகிறது. ஆனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆகியவை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்உள்ளன.
இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சனை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தும் யோசனையை அவர் மனைவி ஜெயா பச்சன் சார்ந்துள்ளசமாஜ்வாடிக் கட்சி கிளப்பியுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் இதுகுறித்து பரிசீலிக்கப் போவதாக அக்கட்சி கூறியுள்ளது. அதேபோலஅமிதாப் பச்சனை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தலாம் என தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கு தான் தகுதியானவன் இல்லை என்று அமிதாப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,குடியரசுத் தலைவர் பதவி என்பது தனிச் சிறப்பு வாய்ந்த, பொறுப்பான, உயர் பதவி. அந்தப் பதவிக்கு>ய தகுதி எனக்கு இல்லை.
இதுதொடர்பாக யாரும் என்னுடன் விவாதிக்கவும் இல்லை, யோசனை கேட்கவும் இல்லை. நிச்சயம் நான் குடியரசுத் தலைவர் பதவிக்குப்போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.












Click it and Unblock the Notifications