சந்திரசேகரனை மாற்றுக: பாஜக கோரிக்கை
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழகபாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக சந்திரசேகரன் உயர்நீதிமன்றத்தின் கடும்விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பில் சந்திரசேகரனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது 3வது நீதிபதிபி..க.மிஸ்ராவும் சந்திரசேகரனை கடுமையாக சாடியுள்ளார்.
நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்டது. எனவே மறு தேர்தல் என்பது தண்டனையாகி விடாது. அது ஒரு தீர்வு மட்டுமே.
வரலாறு காணாத வன்முறையைக் கண்டும் காணாமலும் இருந்ததாக கடுமையாக சாடப்பட்டுள்ள சந்திரசேகரனை உடனடியாக மாநில அரசு மாற்றவேண்டும்.
இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லையேல் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலிலும் இதுபோன்ற அராஜகங்கள், வன்முறைச்செயல்கள் கட்டவிழ்த்து விடப்படும் அபாயம் ஏற்பட்ட விடும் என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications