தமிழ் நாளிதழ்களை கொளுத்திய கன்னடர்கள்
பெங்களூரு:பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் தமிழ் நாளிதழ்களை கொளுத்தி வெறிப் போராட்டத்தில் ஈடுபட்டன கன்னட அமைப்புகள்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் சில போராட்டம் நடத்தி வருகின்றன.தொடர்ந்து நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் நேற்று மைசூரில் தமிழ் தினசரிகளை தீயிட்டுக் கொளுத்தி சில கன்னட அமைப்பினர் போராட்டம்நடத்தினர்.
இன்று காலை பெங்களூரிலும் இந்த மொழி வெறிப் போராட்டம் நடந்தது. இன்று காலை விற்பனைக்காக வந்த தினத்தந்தி, தினகரன், தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளிதழ்களின் பண்டல்களை பறித்துச் சென்ற கன்னட வெறிக் கும்பல் அவற்றை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் வருகிற 24ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications