கண்ணிவெடிக்கு இலங்கை ராணுவ வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தின் வடக்கே ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி பேருந்து சேதமடைந்தது.
இதில் ஒரு வீரர் பலியானார், பலர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ நிலைகள் மீது புலிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர்படுகாயமடைந்தார்.












Click it and Unblock the Notifications